குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அதிகமான அளவில் பரவிக் கொண்டிருக்கிறது..
இதனால் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள் நிரம்பி அதிகமான மக்கள் கூட்டம் நோய் தொற்றால் அவதிப்படுவதை பெற்றோர்கள் வேதனையுடன் பதிவு செய்கிறார்கள்.
தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாமலும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டாததும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் பெரும் பின்னடைவாக காணப்படுகிறது ..
பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் ஒரு பெருநகருக்கு மருத்துவ வசதி இல்லை என்பது சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய கரும்புள்ளியாகவே உள்ளது.
இந்தியாவில் தமிழகம் சுகாதாரத்துறையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்று பெருமளவில் கூறப்பட்டாலும் ..
தொண்டி பேரூராட்சியைப் போல் பல்வேறு பின்தங்கிய பகுதிகள் இன்னும் முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுய் நிலையே தொடர்கிறது .
மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் கூடுதல் மருத்துவ வசதிகள் செய்து தர பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அனைத்தும் குப்பைத் தொட்டியில் போடப்பட்ட மனுக்களை போல் கிடப்பில் கிடக்கிறது என்பது தான் வேதனை .....
தீராத துயரத்தில் தொண்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள்..
இதனால் தற்போது பரவி வரும் கொடுங்காய்சல்களுக்கு தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் அவதிப்படுகிறார்கள் ..
தனியார் மருத்துவமனைகளில் பல மணி நேரம் காத்துக் கிடக்கும் அவல நிலை தொடர்கிறது ....
திமுக ஆட்சியில் இந்த பகுதிவிடியல் பெறவில்லை என்பது நிதர்சன உண்மையாகியுள்ளது...
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்