அதிகமான பிரசவங்கள் இங்கு நடைபெற்று வரும் நிலையில் பெண் மருத்துவர் இல்லாத அவலநிலைதொடர்கிறது.
கடந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வந்த சுகாதார நிலையம் ஐந்து மருத்துவர்கள் கொண்டு செயல்பட்டு 24 மணிநேரமும் முதலுதவி சிகிச்சை அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது ஒரு மருத்துவர் மட்டும் வைத்து செயல்படும் நிலையில் மிக மோசமான சூழ்நிலையில் பொதுமக்கள் போதிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரு நேரத்தில் அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் .
மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கான மருத்துவர்கள் கூட இல்லாத அவல நிலையில்தான் செயல்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பல முறை புகார்கள் அளிக்கப்பட்டும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் கவலை அளிக்கும் செய்தியாக உள்ளது.
தொடர்ந்து துயரங்களை சந்தித்து வரும் பொதுமக்களுக்கு தற்போதைய ஆட்சியில் விடிவு பிறக்குமா ?
செய்தி மக்கள் தொண்டன்
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்