தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

பாஜகவின் மாஸ்டர் பிளான் வெற்றி பெறுமா ...

பாஜகவின் மாஸ்டர் பிளான்  ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனது வெற்றிக்கு பின்னால் பல்வேறு சாதனைகளை செய்து இருப்பதாக கூறுவார்கள் .
ஆனால் பாஜகவை பொருத்தவரை அவர்களுடைய வெற்றிக்குப் பின்னால் பல்வேறு குண்டு வெடிப்புகளும் கலவரங்களும் கொலைகளும் அரங்கேற்றியுள்ளதை நாம் கண்கூடாக காணமுடியும்  மசூதியை இடித்து அரசியலை தொடங்கியவர்கள்.
இன்று இந்திய மக்களை கூறு கூறாக பிரித்து தன்னுடைய அரசியல் ஆதாயத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் .
உண்மையில் இவர்களின் பின்னணியில் இயக்குவது RSS என்ற மத பயங்கரவாத அமைப்பு இந்த மத பயங்கரவாத அமைப்பை இயக்குவது உயர் ஜாதிகள் கையில் இருக்கக்கூடிய கார்ப்ரேட் நிறுவனங்கள்.
இது தான் நிதர்சன உண்மை பொதுவுடமை இந்தியாவை தற்போது தனி உடைமை ஆக்கிவிட்ட பாஜக தொடர்ந்து தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்தி வருகிறது.
தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டிலுள்ள பல்வேறு பொதுச் சொத்துக்களை தனியாருக்கு விற்று வரும் இந்த நிலையில்.
நாட்டிலுள்ள 99%சதவீதத்திற்கு மேற்பட்ட சாமானிய மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கும்  நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டு காலத்தில்  பன்மடங்கு அத்தியாவசிய பொருள்கள் உயிர்காக்கும் முக்கிய உபகரணங்கள்  விலையேற்றம் 

GST என்ற பெயரில் மிகப்பெரிய விலை ஏற்றங்களையும் வரிச் சுமைகளையும் மக்கள் மீது சுமத்தி மாநிலத்தின் தன்னாட்சி அதிகாரங்களைப் பறித்து  இன்று ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி உள்ளது பாஜக அரசு. 

 99 சதவீத மக்களின் உழைப்பை உறிஞ்சி சாப்பிடக்கூடிய ஒரு கூட்டம்தான் இந்தியாவின் பெரும்பான்மை சமூகங்களின் பிரதிநிதி என்ற போர்வையில் பெருமான்மை மக்களுடைய உரிமைகளை பரித்து அவர்களுடைய முன்னேற்றங்களை அழித்துக்கொண்டு இருக்கக்கூடிய பாஜக....
இவர்களுக்கு உண்மையில் சாதனையை சொல்லி கேட்பதற்கு ஏதும் இல்லை ஆனால் பிற மக்கள் மத்தியிலேயே மத உணர்வுகளை தூண்டிவிட்டு அதை மிகப்பெரிய அளவில் கலவரமாகி அப்பாவி மக்களை பலி கொடுத்து அதில் அரசியல் செய்யக்கூடிய  சுதந்திரங்களை சுதந்திர இந்தியாவில் தொடங்கியவர்கள் இன்றுவரை மக்களை ஏமாற்றி அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில்  வருகை தந்த தேசியத்தலைவர் நட்ட எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம் ஆனால்  வடிவேலு கிணத்தை காணோம் என்ற கதையாய் போய்விட்டது தற்போது நட்டாவின் பேட்டி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று வெறுமென வாக்குறுதி கொடுத்து ஒரு செங்கலை நட்டுவிட்டு போயி எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது ஆனால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95% சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக நட்டா கூறியுள்ளது பாஜக மற்றும் அவர்களுடைய சகாக்களை போல் பொய் சொல்வதற்கு உலகத்திலே யாரும் இல்லை என்று நிரூபித்து விட்டார்.
பாஜக என்ற அரசியல்  அமைப்பின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் இவர்களுக்கு பல்வேறு முகங்கள் உண்டு ஆனால் இவர்கள் அனைவருமே இந்து என்ற போர்வையில் மக்களை ஏமாற்றுவார்கள். 
ஆனால் சாமானிய இந்துமக்கள் தன்னுடைய கல்வி ,வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ,உயர் பதவிகளுக்கு செல்வது இவை அனைத்துக்கும்  சாமானிய  ஹிந்துக்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கற்களாகவே செயல்படுவார்கள் பாஜக சங்கிகள் தான்  . இந்திய நீதித்துறை மற்றும் ஐஏஎஸ் ஐபிஎஸ் துறைகளில் இன்றுவரை  ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே அதாவது ஆர் எஸ் எஸ் ஐ ஆளக்கூடிய ஒரு குறிப்பிட்ட பார்ப்பனியம் மட்டுமே 60%மேற்பட்ட  இடங்களை தன்கையில் வைத்துள்ளது.
பிற சமூக மக்களை கீழ்நிலை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில் 3% உள்ள இந்த சமூகம் 80 சதவீத பதவிகளில் இருப்பது பத்தாது என்பதற்காக மேலும் 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளது.
ஆனால் இதையெல்லாம் கேட்டு விழிப்படைந்து வரும் இந்து மக்களை திசை திருப்புவதற்காகவே பல்வேறு சூழ்ச்சிகளை BJP RSS செய்து வருவது வழக்கம் அதனுள் தொடர்ச்சியாகத்தான் நாடாளுமன்றத் தேர்தல் துவங்குவதற்கு ஒரு ஆண்டுகள் இருக்கும் இந்த நிலையில் இந்தியா முழுவதும் கலவரங்களை ஏற்படுத்த திட்டம் தீட்டி உள்ளது என்ற தகவலை ஏற்கனவே அமெரிக்காவின் உளவுத்துறை எச்சரித்துள்ளது..  அந்த தகவலை மேம்படுத்தும் வகையில் தற்போது சிறுபான்மை அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை தீவிரவாத மற்றும் பயங்கரவாத தோடு தொடர்புபடுத்தி கைது நடவடிக்கைகளை செய்து அதன்மூலம் பாஜகவின் திட்டத்தை நிறைவேற்ற சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான பாதுகாப்பு பொறுப்புகளில் RSS உறுப்பினர்களே முக்கிய தலைமைப் பொறுப்புகளில் இருப்பதால்.  நேர்மையாக செயல்படக்கூடிய அதிகாரிகள் அவர்களால் செயல்பட முடியாத நிலையும் இங்கு நீடித்து வருகிறது.

இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசோடு கைகோர்த்து அவர்களும் செயல்படுவது.  முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முஸ்லிம்களை குறிவைத்து வேட்டையாடுவது என்பது நிச்சயம் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை திமுகவிற்கு ஏற்படுத்தும்.

அதிமுகவும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் போன்ற அமைப்புகள் முறையாக முஸ்லிம் மற்றும் ஏனைய சமூக மக்களுடைய ஆதரவை பெறும் பட்சத்தில் தமிழகத்தில் திமுகவின் வளர்ச்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் ...இது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பாஜக போட்டுள்ள மாஸ்டர் பிளான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ...
வெற்றி பெறுமா அல்லது தோல்விபெருமா என்பது திமுகவின் செயல்பாட்டில் தான் உள்ளது ..


Post a Comment

0 Comments