மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 23ஆகஸ்ட் 2022 அன்று அறிவித்த அனைத்து சட்டமன்றத் தொகுதியின் அத்தியவசிய குறைகளைத் தீர்க்கும் விதமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டதை அறிந்து மாவட்ட பொறுப்பாளர் திரு காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி நமது திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இரா . கரு மாணிக்கம் MLA அவர்களிடம்
தொண்டி பேரூராட்சி தலைவர்
ஷாஜஹான் பானு
ஜவஹர் அலிக்கான்
அவர்கள் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பவும் தொண்டியில் மகளிர் கலைகல்லூரி அமைத்திடவும் தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைத்திடவும் தொண்டியை சுற்றுலா நகராக அறிவித்து பொழுதுபோக்கு பூங்கா அமைத்திடவும் கேட்டு இந்தக் கோரிக்கைகள் அனைத்தினையும் முதலமைச்சரிடம் பரிந்துரை செய்து அதனை சிறப்பாக செயல்படுத்தி தருமாறு தொண்டி பேரூராட்சியில் தலைவர்ஷாஜஹான் பானு அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் இரா கரு மாணிக்கம் அவர்களிடம் நேரடியாக எழுத்துப்பூர்வ கோரிக்கைகளை மனுவாக சமர்ப்பித்துள்ளார்.
தொடர்ந்து பலமுறை திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் பாரம்பரியமாக வெற்றி பெற்று வந்த கரியமாணிக்கம், kR ராமசாமி தற்போதைய எம்எல்ஏ கரு மாணிக்கம் என தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில். தங்களை வெற்றி பெற வைத்த. தொண்டி பகுதி மக்களுக்கு தொண்டியின் வளர்ச்சியில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ...
இந்த முறையாவது பகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது ..
செய்து தரப்படுமா அல்லது மீண்டும் ஏமாற்றமே மிஞ்சுமா...
என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ...
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்