தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து அமெரிக்க விமானப்படை வீரர் தற்கொலை

தற்கொலை செய்து கொள்ளும் கோரக்காட்சி
 ☝️ மனம் பலகீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
வாஷிங்டன் : பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் ஹமாஸ் சுதந்திர போராளிகள் மீது இஸ்ரேலிய  பயங்கரவாத    ராணுவம், தொடர் தாக்குதல்களை அப்பாவி பொதுமக்கள் மீது  நடத்தி வருகிறது.  30 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 உலக நாடுகள் ஒன்றிணைந்து காசாவில் நடத்தப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை தடுக்க கோரி பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வந்த போதிலும் அதை தன்னுடைய தனிப்பட்ட வீட்டோ அதிகாரத்தால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி போரை தொடரச் செய்தது.....

இந்நிலையில், அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து அப்பாவி மக்கள் மீது இன அழிப்பு செய்து வரும் பயங்கரவாத போக்கை நிறுத்த கோரி 
அமெரிக்க விமானப் படை வீரர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்  தன்னைத் தானே தீயில் எரித்துக் கொண்டு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்  பயங்கர தீக்காயங்களுடன் தவித்த அவரை  உடனடியாக பாதுகாப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்து அவரைக் காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் அமெரிக்க ராணுவப் படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த வீரரின் பெயர் ஆரோன் புஷ்னெல் என்றும் சான் ஆன்டானியோ, டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 அப்பாவை பாலஸ்தீன மக்களுக்காக தன்னுடைய உயிரையும் மாய்த்துக் கொண்டு போராட்டம் நடத்திய மனிதநேய காப்பாளருக்கு நாம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்.....

 அநியாயக்கார இஸ்ரேலின் கொலைவெறி ஆட்டத்துக்கு ஒத்துப்போகும் அமெரிக்காவின் ஆட்சியாளர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் அந்த நாட்டு ராணுவ வீரரை தற்கொலை செய்து கொண்டு நியாயம் கேட்டது  உலக அரங்கையே கதிகலங்க செய்துள்ளது.




Post a Comment

0 Comments