முன்னதாக, ஒரு நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், “தொடர்ந்து, எங்களிடம் இருந்து நமது சின்னங்கள் பறிக்கப்படுகின்றன. வள்ளுவரை காவி நிறமாக்குவது அல்லது ராஜ ராஜ சோழனை இந்து மன்னன் என்று அழைப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. சினிமா சாமானியர்களின் ஊடகமாக இருப்பதால், ஒருவரின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க அரசியலைப் புரிந்துகொள்வது அவசியம் என்று வெற்றிமாறன் எச்சரித்தார்.
ஆரியப் ஆப்கானில் இருந்து விரட்டப்பட்டார்கள்...
ஆரியர்கள் வருகைக்கு முன் தமிழர்கள் இயற்கையை வணங்கி வந்தனர். தங்களுடைய பூர்வீகம் மண்ணான ஆப்கான் பகுதியிலிருந்து ஆரியர்கள் விரட்டப்பட்ட போது கைபர் கோலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் குடியேறியஆரியப் பார்ப்பனர்கள் அன்றைய காலகட்டங்களில் இயற்கையை வணங்கி கொண்டிருந்த தமிழ் மக்களை உருவ வழிபாட்டிற்கு மக்களை திசை திருப்பினார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. இந்த உண்மையை பல்வேறு காலகட்டங்களில் வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டு மறைக்கப்பட்டது.
ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் இல்லை. வைணவம், சிவம் மற்றும் சமணம் இருந்தது, அதை கூட்டாகக் குறிப்பிடத் தெரியாததால் ஆங்கிலேயர்கள் 'இந்து' என்ற வார்த்தையை உருவாக்கினர். துாத்துக்குடியை எப்படி தூத்துக்குடியாக மாற்றினார்களோ அதுபோலத்தான் இருக்கிறது” என்று கமல்ஹாசன் கூறினார்.
சகாப்தத்தில் பல மதங்கள் இருந்ததாகவும், 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் 'ஷண்மத ஸ்தாபனம்' உருவாக்கியதாகவும் அவர் கூறினார்.
நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்த கமல்ஹாசன், வரலாற்றின் அடிப்படையில் ஒரு புனைகதையைக் கொண்டாட வேண்டிய தருணம் இது என்றும் கேட்டுக் கொண்டார். இதில் வரலாற்றைப் பெரிதுபடுத்தவோ, திரிக்கவோ, மொழிப் பிரச்னையைக் கொண்டு வரவோ வேண்டாம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்