இந்தியாவை 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இல்லாத அளவிற்கு மோசமான பேரழிவு திட்டங்களை தொடர்ந்து மதவாத அடிப்படையில் ஆட்சி செய்யும் பாஜக செய்து கொண்டிருக்கிறது.
அதனால்தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு மதக் கலவரங்கள் அரங்கேற்றப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மதஅடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்டார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக செயல்பட்ட சங்பரிவார் சக்திகள் தொடர்ந்து காங்கிரசின் உதவியுடன் இதை எல்லாம் செயல்படுத்தி வந்தது. இருப்பினும் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மறைமுகமாக நடைபெற்று வந்த மத அடிப்படைவாத இந்துத்துவா செயல்பாடுகள் தற்போது பாஜக ஆட்சியில் பகிரங்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுபான்மை மக்களுக்கு இந்தியாவில் கொடுக்கப்பட்ட பல்வேறு உரிமைகள் தற்போது பாஜக ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது.
மட்டுமல்லாமல் அவர்களுடைய அடிப்படை வழிபாட்டு உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது ..இதனுடைய உச்சபட்ச நடவடிக்கையாக இந்திய சுதந்திர வரலாற்றில் சிறுபான்மை மக்களுடைய பங்களிப்பை முற்றிலும் வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து நீக்கும் வேலையை பாஜக மதவாத அரசுகள் செய்து வருகிறது.
மேலும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டங்களில் முஸ்லிம்களின் பங்களிப்பை அகற்றி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கிடையாது என்ற நடைமுறையை செயல்படுத்த பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு மறைமுகமாக பல்வேறு எதிர்க்கட்சிகளும் கூட ஆதரவு கொடுத்து வருகிறது. தற்போது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல கட்சிகள் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே.
இந்நிலையில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறப்பட்ட போதிலும் அப்படி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா மிகப்பெரிய பேரழிவுக்கு ஆளாகும் என்று பல்வேறு சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச அளவில் இந்தியா தனிமைப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் பல்வேறு போர் சூழல்களுக்கு இந்திய ஆளாகும் நிலை உருவாகும். இதனால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவுக்கு இந்திய ஆளாகும் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அண்டை நாடுகளான சீனா பாகிஸ்தான் பங்களாதேஷ் மாலதிவு உள்ளிட்ட இந்தியாவை சுற்றியுள்ள பல்வேறு நாடுகள் உறவில் மோசமான கசப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது நரேந்திர மோடி அரசு தற்போது தொடர்ந்து உலக அளவில் பெரும்பான்மை சமூகமாக வாழும் இஸ்லாமியர்கள் விஷயத்தில் தொடர்ந்து மோடி அரசு வெறுப்பு அரசியலை அரங்கேற்றி வருகிறது..
சிறுபான்மையாக பல நாடுகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் உலக அளவில் மிகப் பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் முஸ்லிம்கள் இந்தியாவில் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்....
குறிப்பாக இது பெரும்பான்மை மக்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும்....
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் சமூக அமைதிகள் சீர்குலையும் என்று கவலை தெரிவிக்கிறது சர்வதேச மனித உரிமைகள் ஆணையம்...
வரும் நாடாண்டு மன்றத் தேர்தல் இந்த அளவுக்கு நேர்மையாக வாக்குப்பதிவு நடைபெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.. மென்மையாக நடந்தால் மட்டுமே இந்தியா மதவாதத்தை ஆதரிக்கிறதா அல்லது அமைதியை விரும்புகிறதா என்பதை உலகம் அழிய முடியும்.......
By" மக்கள் தொண்டன்
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்