மனிதன் என்ற அடிப்படையில் மனிதன் தவறுக்கு அப்பாற்பட்டவன் அல்ல தன்னுடைய பொதுவாழ்க்கையில் பல்வேறு நிறை குறைகள் இருந்தாலும் ..
தன்னுடைய ஜமாத் பொறுப்பை சிறப்பாக செவ்வனே செய்திருக்கிறார் .....
இன்றைக்கு தெற்கு தெரு ஜமாத் நிர்வாகத்தின் மிகப்பெரிய வருவாய்க்கு காரணமாக தன்னுடைய உழைப்பை செலுத்தியிருக்கிறார் ...
பதவியில் இருந்தபோது முடியாத காலத்தில்கூட. சென்னை வக்பு வாரியத்திற்கும் ராமநாதபுரம் வக்பு வாரியத்திற்கும் அலைந்து திரிந்து
பள்ளிவாசலின் பல்வேறு பணிகளை நிறைவு செய்வதற்காக அலைந்து திரிந்து பணி செய்திருக்கிறார் ....
பொதுவாழ்க்கையில் அவர் பலரிடம் கடுமையாக நடந்து இருக்கலாம் ....
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சிலநேரங்களில் அப்படித்தான் நடந்தாக வேண்டும் என்ற சூழலும் இருக்கிறது ....
ஆனால் தன்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் ...
அல்லாஹ் அவருடைய சிறிய பெரிய தவறுகளை மன்னித்து அருள் செய்வானாக .....
அவர் வாழும் காலத்தில் யாருக்கேனும் மனம் புண்படி பேசி இருந்தாலும் தவறு செய்து இருந்தாலும் இறைவனுக்காக மன்னித்து விடுங்கள் .....
அல்லாஹ் அவருடைய மண்ணறை வாழ்க்கையை சுவன பூஞ்சோலையாகவும் ....
மறுமையில் சொர்க்கத்திற்குறிய வாழ்க்கையாக. அமைத்து வைப்பானாக அன்னாரை இழந்து வாடும் உறவுகளுக்கு வல்ல இறைவன் மன அமைதி வழங்குவானாக .....
ஆமீன் ஆமீன் யாரப்பல் லாலமீன் ....
By"" மக்கள் தொண்டன் """'
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்