பிறப்பு | பசும்பொன் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர் அக்டோபர் 30, 1908 பசும்பொன், இராமநாதபுரம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
---|---|
இறப்பு | 30 அக்டோபர் 1963 (அகவை 55) |
கல்லறை | பசும்பொன், இராமநாதபுரம், தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | தெய்வத் திருமகன் |
பணி | விவசாயம், அரசியல்வாதி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு 1939 வரை அனைத்திந்திய பார்வார்டு பிளாக் |
சமயம் | இந்து |
பெற்றோர் | உக்கிரபாண்டி தேவர் இந்திராணி அம்மையார் |
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர், பிறந்த போது தன்னுடைய தாயை இழந்தார்.குழந்தை சிறுவயது முதல் முஸ்லிம் தாயார் ஆயிசா இவருக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்த்துவந்தார்.
அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி, தேவருடன் இணைந்து தொடங்கியதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[3][4][5]
1957-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான இவரை, மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்குப் பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டுப் பின்னர் இந்தக் கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா? என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்..
தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய நிலங்களில் வேலை பார்த்த ஏழை விவசாயிகளுக்கு ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு தானமாக கொடுத்தவர் முத்துராமலிங்க தேவர் அவர்கள்.
இவரை ஒரு குறிப்பிட்டசமூகம் கொண்டாடுவது அந்த சமூகத்தின் தலைவராக அவரை ஏற்றுக் கொண்டு.ஆனால் அவரோ அனைத்து மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட தியாகி அரசியலும் ஆன்மீகமும் இரு கண்கள் என்று கூறியவர்.
நேதாஜி படையின் ராணுவ தளபதியாக இருந்த சாமவாஸ் அவர்களோடு தேவர் அவர்களுக்கு மிகுந்த நட்புஉண்டு முத்துராமலிங்க தேவர் அவர்களுடைய ஆன்மீக சிந்தனையில் இஸ்லாமிய சமூகத்திற்கு மிகப்பெரிய இடம் கொடுத்திருந்தார். எப்பொழுதும் முஸ்லிம்களுன் நல்லிணக்கத்தை பேணிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
எழுத்துரிமை ! பேச்சுரிமை ! கருத்துரிமை ! இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனைக்குட்பட்டது இதில் யாருக்கும் எந்த தடையுமில்லை இறுப்பினும் !!
விமர்சனங்கள் நியாயமாகவும் நீதமாகவும் இருக்கவேண்டும் !
தவறான விமர்சனங்களை செய்யும்போது அரசின்(சமூகத்தின்) நடவடிக்கைக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் காரணமாக முடியாது ! என்பதை இதன்மூலம் தெரிவித்துகொள்கிறேன் - நிர்வாகம்